"உங்கள் காவல் துறையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்"- குழந்தைகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி


காவல்துறையின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநகர காவல் நிலையங்களில் வாரந்தோறும் 'நோ  யுவர் போலீஸ்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு  காவல் துறை குறித்து தெரிந்துகொள்வர்.

அதன்படி, கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தனர். அங்கு இருக்கும் அனைத்து துறைகளுக்கும் சென்று போலீசாரின் அன்றாட பணிகளை தெரிந்து கொண்டனர்.  இதையடுத்து, துணை கமிஷனர் (போக்குவரத்து) சரவணன் மாணவர்களுடன் உரையாடினார்.  



அப்போது அவர், சமூகத்தில் உயர்ந்த பொறுப்புக்கு வரும் மனிதர்கள் அனைவரும் பள்ளி அளவில் தேசிய மாணவர்படை, சாரணர் படை ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்றார். மேலும், மாணவர்கள் அந்த இயக்கங்களில் சேர்ந்து சமூக பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பின்னர், காவல் துறையில் பணியாற்ற மாணவர்கள் துணை கமிஷனரிடம் ஆர்வம் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...